யார் பெரிய ஆள் என்ற போட்டியில் வாலிபருக்கு சரமாரி வெட்டு

வாலிபரை வழி மறைத்து சரமாரியாக வெட்டிய கும்பல் .
யார் பெரிய ஆள் என்ற போட்டியில் வாலிபருக்கு சரமாரி வெட்டு
Published on

சென்னை நெற்குன்றம், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் என்ற காளை (வயது 21). இவர், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த வாலிபர்கள் சிலர் சவுந்தரபாண்டியனை சரமாரியாக தாக்கி, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயம் அடைந்த சவுந்தரபாண்டியன், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (19), திருமலை (19) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என 5 பேரை கைது செய்தனர்.விசாரணையில் அவர்களுக்குள், ஏரியாவில் யார் பெரிய ஆள்? என்ற போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக சவுந்தரபாண்டியை கத்தியால் வெட்டியது தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com