திருத்தணி துணை-போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

திருத்தணி துணை-போலீஸ் சூப்பிரண்டாக விக்னேஷ் பதவியேற்றுக்கொண்டார்.
திருத்தணி துணை-போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
Published on

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக சாய் பிரணித் பணியாற்றி வந்தார். அவர், கடந்த வாரம் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்று விட்டார்.

இந்நிலையில் திருத்தணிக்கு புதிய துணை-போலீஸ் சூப்பிரண்டாக விக்னேஷ் நேற்று பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com