வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நெருங்குவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
Published on

புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நெருங்குவதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள் இந்த பேராலயமானது கீழை நாடுகளின் 'லூர்துநகர்' என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்கும், இந்த பேராலயம், வங்கக் கடலோரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

ஆண்டு திருவிழா

வேளாங்கண்ணி பேராலயத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரையில் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com