சமூக வலைதளத்தில் பரவும் தகவல்: 7-ந்தேதி அரசு விடுமுறையா? - தமிழக அரசு விளக்கம்


சமூக வலைதளத்தில் பரவும் தகவல்: 7-ந்தேதி அரசு விடுமுறையா? - தமிழக அரசு விளக்கம்
x

7-ந்தேதி அரசு விடுமுறை இல்லை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

சென்னை

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 7-ந்தேதி அரசு விடுமுறை என்று சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது, வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மொஹரமை முன்னிட்டு 7-ந்தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான தகவலாகும்.

"கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-06-2025 தேதி அன்று மொஹரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை (06-07-2025) ஆகும்" என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 7-ந்தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை இல்லை. தவறான தகவலை பரப்பாதீர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story