ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தமா..? - இயக்குநர் நெல்சன் மனைவி திட்டவட்ட மறுப்பு

தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவி மோனிஷா நெல்சன் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பண பரிமாற்றமும் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மறுப்பு தெரிவித்து மோனிஷா நெல்சன் பொது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பான அந்த பொது அறிவிப்பில், "இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் மனைவிக்கு எதிராக பல ஆன்லைன் தளங்கள், செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சினிமா தளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் புகாரளிக்கும் வகையில் தொடர் செய்திகள், நேர்காணல்கள் மற்றும் வெளியீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 07, 2024 அன்று, வழக்கறிஞர் கிருஷ்ணன் தொடர்பாக விளக்கம் கோரி, மோனிஷா நெல்சனை போலீசார் வரவழைத்துள்ளனர். எனது வாடிக்கையாளர் அதையே தெளிவுபடுத்தி முழு ஒத்துழைப்பையும் அளித்து காவல்துறை அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

இதனிடையே அவரது பெயருக்கும், அவரது கணவரின் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் அடிப்படை நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடகங்களையும் பிறரையும் கேட்டுக்கொள்கிறோம். சம்பந்தப்பட்ட தரப்பினரின் உணர்வுகளை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில் வெளியிடப்படும் இத்தகைய பிரசுரங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்தகைய வெளியீடுகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். பின்பற்றாத பட்சத்தில், அவரது நலன் மற்றும் நற்பெயரைப் பாதுகாக்க சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com