விருத்தாசலம் அருகே பரபரப்புவீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடிதப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே பரபரப்புவீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவரை கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடிதப்பி ஓடிய 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியை சோந்தவர் ஆதிமூலம்(வயது 36). விவசாயி. இவரது மனைவி வித்யா. இவர்கள் தங்களது குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, இரவு 2 மணிக்கு, இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், வித்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை நைசாக பிடித்து இழுத்து அறுத்துள்ளார். அப்போது கண் விழித்த அவர், கூச்சலிட்டார். உடன் ஆதிமூலம் அவரை பிடிக்க முயன்றார். அதற்குள் அந்த நபர், வெளியே தப்பி ஓடியநிலையில், அங்கு அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் ஓடினர்.இதில் ஒருவர் தவறி கீழே விழுந்தார். உடன் அந்த நபரை ஆதிமூலம் மடக்கி பிடித்தார்.

பொதுமக்கள் தர்ம அடி

இதனிடையே, தப்பி ஓடிய 2 போ திரும்பி வந்து ஆதிமூலத்தை தாக்கினர். அவர் கூச்சலிட்டதை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அதற்குள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதற்கிடையே பிடிப்பட்ட திருடனை கட்டிப் போட்டு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் நேரில் சென்று விசாரித்தனா. பின்னர் ஆதிமூலம், பிடிப்பட்ட திருடன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கைது

தொடர்ந்து பிடிப்பட்ட திருடனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை கைது செய்து, தப்பிஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இவர்கள் வேறு எங்கு திருடி உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com