விருத்தாசலத்தில்பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்புமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலத்தில்பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்புமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் பூதாமூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி அமுதா (வயது 46). இவர் தனது மகன் சக்திவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தியவாடி கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.

கருவேப்பிலங்குறிச்சி- விருத்தாசலம் சாலையில் உள்ள வேடப்பர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் அமுதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து சென்றனர். இதில் நிலை தடுமாறி அமுதா மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.

வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த சக்திவேல் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com