வேப்பூர் அருகே 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வேப்பூர் அருகே 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேப்பூர் அருகே 2 வீடுகளில் ரூ.2½ லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

ராமநத்தம்,

ரூ.80 ஆயிரம் கொள்ளை

வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் செல்வராசு(வயது 49). இவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவருடைய மகள் அம்மு(29) அதே ஊரில் தனசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வராசின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி அம்முவுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த அலமாரி உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

மற்றொரு வீடு

இதேபோல் கழுதூரை சேர்ந்த ராமலிங்கம் மனைவி வினிதா(24), நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com