மனைவியுடன் தகராறில்... 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை

சென்னை தண்டையார்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியுடன் தகராறில்... 2-வது மாடியில் இருந்து குதித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை
Published on

சென்னை தண்டையார்பேட்டை வினோபா நகரைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 52). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி கல்பனா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள்.

லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மனைவி கண்டித்தார். இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த லோகநாதன், வீட்டின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருவொற்றியூர் பூந்தோட்டம் தெருவை சேர்ந்தவர் செல்வா (29). வெல்டிங் தொழிலாளியான இவர், நிவேதா (25) என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு நிவேதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதில் விரக்தி அடைந்த செல்வா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com