குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

குட்கா ஊழல் தொடர்பான விசாரணை விரைவாக நடைபெற்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

குட்கா ஊழல் தொடர்பான விசாரணை விரைவாக நடைபெற்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், குட்கா விற்பனையை அம்பலப்படுத்த பேரவையில் குட்காவைக் காட்டிய திமுக உறுப்பினர்கள் மீதான இரண்டாவது உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது!

இப்போதும் போதைப்பொருள் விற்பனை நடப்பதை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடுகின்றன.

#GutkaScam-ல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com