பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி

பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நடந்தது.
பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கபடி போட்டி அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் நடராஜன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வட்டாரத்தில் உள்ள 18 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், வி.களத்தூர் அரசுப்பள்ளி 2-ம் இடத்தையும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பூலாம்பாடி அரசு பள்ளி முதலிடத்தையும், வி.களத்தூர் பள்ளி 2-ம் இடத்தையும், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பூலாம்பாடி பள்ளி முதலிடத்தையும், வெங்கலம் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு தழுதாழை ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராஜேஷ் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் அனைத்து பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான மகளிர் கபடி போட்டி நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com