களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்

களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர்.
களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு: குற்றவாளிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்
Published on

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளை இன்று கன்னியாகுமரி போலீசார் குழித்துறை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com