காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு

காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய மாநகராட்சி கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாநகராட்சியில் போலி சாதி சான்றிதழ் வழங்கிய கவுன்சிலர் பதவியில் நீடிக்க தடை - காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவு
Published on

காஞ்சீபுரம் மாநகராட்சி தேர்தலில் 27-வது வார்டு உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஷாலினி வேலு.

இவருக்கு போட்டியாக அதே வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் விஜயகுமாரி. தேர்தலின் போது ஷாலினி வேலு தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார் என்றும் இவரது வெற்றி செல்லாது எனவும் அவருக்கு எதிராக போட்டியிட்ட விஜயகுமாரி காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கானது காஞ்சீபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் முன்னிலையில் நடந்தது. அவர் வழங்கிய தீர்ப்பில் போலி சான்றிதழ் வழங்கியதற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் வழங்கிய தீர்ப்பில் ஷாலினிவேலு கவுன்சிலர் பதவியில் நீடிக்கவும், காஞ்சீபுரம் மாநகராட்சி சார்ந்த மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவும் தற்காலிக தடை விதித்து மாவட்ட நீதிபதி செம்மல் தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com