காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி - மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணிகளை மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி - மேயர் மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்தார்
Published on

காஞ்சீபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த குளம். 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குளத்தில் நீராடிய பின் காஞ்சீபுரம் ஏகாம்பர நாதரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மேலும் ஏகாம்பரநாதர் பங்குனி திருக்கல்யாண விழாவின்போது தீர்த்தவாரி நிகழ்ச்சி இங்கு நடைபெறுவது வழக்கம். இந்த குளத்தில் பக்தர்கள் நீராட செல்வதில்லை. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் காஞ்சீபுரம் மாநகராட்சி தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து என் குப்பை. என் பொறுப்பு. எனும் திட்டத்தின் கீழ் அனைவரும் மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர். காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குளத்தில் மிதந்து கிடந்த கழிவுகள் மற்றும் நடைபாதைகளில் இருந்த கழிவுகள் என அனைத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இது போன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருக்குளங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செவிலிமேடு, சதாவரம் பகுதிகளிலும் குளங்கள் தூர் வாரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com