கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரியில் 2 ஆண்டு டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் இரண்டு வருட டிப்ளோமா தோட்டக்கலை படிப்பிற்கு உடனடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. BC-16, BCM-3 & SCA-1 ஆகிய காலியிடங்கள் உள்ளன. பேச்சிப்பாறை அரசு பள்ளி மற்றும் விவசாய கல்லூரியில் உடனடி சேர்க்கைக்கு நேரில் வரவும்.

அசல் சான்றிதழ்கள் மற்றும் கவுன்சிலிங் கட்டணம் ரூ.5,400 மட்டுமே கொண்டுவந்தால் போதுமானது. முதலாம் ஆண்டு மொத்த கட்டணம் ரூ.11,000. இரண்டு ஆண்டுகள் படித்து முடித்தவுடன் அக்ரிகல்சர் அசிஸ்டெண்ட் தேர்வு எழுதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு அக்ரிகல்சர் அலுவலங்களில் வேலைவாய்ப்பினை பெறலாம். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு பழபண்ணை, நர்சரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் வேலை பெறலாம். பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

சுயதொழில் தொடங்கவும் விவசாய கடன் பெறலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு வேளாண்மை சார்ந்த அலுவலகங்களிலும் ஆராய்ச்சி நிலையங்களிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த கடைசி வாய்ப்பினை பயன்படுத்தி அட்மிஷன் பெறுமாறும் இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அட்மிஷன் தொடர்பான விசாரணைக்கு பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளலாம். பேச்சிப்பாறை அரசு தோட்டக்கலை ஆராய்ச்சி கல்லூரி முதல்வர்: 94424 50976, பேச்சிப்பாறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 9486447128, 94898 27527.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com