சாலையில் நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி

பரமத்தி வேலூர் அருகே சாலையில் நடந்து சென்றவர் வாகனம் மோதி இறந்தார்.
சாலையில் நடந்து சென்றவர் வாகனம் மோதி பலி
Published on

பரமத்திவேலூர்

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் எல்லாம்பாளையம் அருகே கடந்த 20-ந் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர் மீது வாகனம் மோதி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார். 5 உயரம் உள்ள அவர் வெள்ளை நிற தாடியுடன் காணப்பட்டார். வாகனம் மோதி உயிரிழந்த அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக எல்லாம்பாளையம் பகுதிக்கு வந்தார்? என்பது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com