ஏப்ரல் 25-ந் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு தகவல்

குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 25-ந் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு தகவல்
Published on

காஞ்சிபுரம்,

பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com