தேவாலயங்களில் குருத்தோலை பவனி

தேவாலயங்களில் குருத்தோலை பவனி நேற்று நடந்தது.
தேவாலயங்களில் குருத்தோலை பவனி
Published on

தவக்காலம்

ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்தார். அதை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஏசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்தபோது எருசலேம் நகர வீதியில் கழுதையின் மேல் ஊர்வலமாக வந்தபோது, மக்கள் அவருக்கு ஒலிவ இலைகள் உள்ளிட்ட இலைகளை பரப்பி "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா..." என்று கோஷமிட்டு வரவேற்றனர் என கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது.

குருத்தோலை ஞாயிறு

அதனை நினைவுப்படுத்தும் விதமாக, கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுவதும், இந்த நாளில் தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெறுவதும், வழக்கம்.

அந்த வகையில் தேவாலயங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறு பவனி கடைப்பிடிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்தபடி பாடலைப் பாடியபடியும் வலம் வந்தனர். அதன் பின்னர் தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் அவர்கள் கலந்து கொண்டனர்.

புனித வெள்ளி

குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து, வருகிற 6-ந்தேதி தேவாலயங்களில் பெரிய வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

அதன்பின்னர், 7-ந் தேதி புனித வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும். இந்த நாளில் ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை எடுத்துக்கூறும் விதமாக தேவாலயங்களில் மும்மணி நேர தியான ஆராதனை நடைபெறும்.

ஈஸ்டர் பண்டிகை

இதையடுத்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்ட ஏசு கிறிஸ்து மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் வகையில், ஈஸ்டர் பண்டிகை, உயிர்ப்பு பெருவிழாவாக கிறிஸ்தவர்களால் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com