தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம்: போலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் ஆய்வு

தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆய்வு நடத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில், தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரங்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர்கள், சூப்பிரண்டுகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் கூடுதல் தலைமை செயலாளர்கள் பணீந்திர ரெட்டி, ஜவஹர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பொதுத்துறை அரசு செயலாளர்கள் ஜகந்நாதன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com