வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு

பெரம்பலூல் வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் 2-வது நாளாக கோர்ட்டு புறக்கணிப்பு
Published on

பெரம்பலூர் வக்கீல்கள் சங்கத்தின் (குற்றவியல்) செயலாளர் மூத்த வக்கீல் சேகரை 2 பேர் தாக்கி, அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், வக்கீல்களுக்கு பாதுகாப்பு சட்டத்தினை உடனே நிறைவேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் பெரம்பலூர் வக்கீல் சங்கத்தை (குற்றவியல்) சேர்ந்த வக்கீல்களும், அட்வகேட் அசோசியேசனை சேர்ந்த வக்கீல்களும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று முன்தினம் முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளான நேற்றும் அவர்கள் கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com