சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சிறுமி பலாத்கார வழக்கில் முதியவருக்கு ஆயுள்தண்டனை - செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
Published on

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, போந்தூர் பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி என்கிற ராஜமாணிக்கம் (வயது 62). இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு குழந்தை இல்லாததால் இவரும் இவரது மனைவியும் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜமாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வந்தனர்.

மேலும், அவரை மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து ராஜமாணிக்கம் மீது செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி தமிழரசி தீர்ப்பு வழங்கினார். அதில், ராஜமாணிக்கத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.40 ஆயிரமும் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் புவனேஷ்வரி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com