மது விற்றவர் கைது

களியக்காவிளையில் மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
Published on

களியக்காவிளை, 

களியக்காவிளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் சிங் தலைமையில் போலீசார் களியக்காவிளை மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோனையிட்ட போது அவரிடம் மது பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் களியக்காவிளையை சேர்ந்த ஆல்பர்ட் (வயது50) என்பதும் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆல்பர்டை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 4 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூ.2000-த்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com