

மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பெருவிழா, கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் 6-ம் நாள் திருவிழாவான இன்று (புதன்கிழமை) காலை தங்க நிற மரப் பல்லக்கிலும் இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை) சிகர திருவிழாவான தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேர்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அண்ணாத்துரை அறிவித்துள்ளார்.