அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டு உடைப்பு

பெரம்பலூரில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் மளிகை கடையில் இருந்த சிகரெட் பாக்கெட்டுகளை அள்ளிச்சென்றனர்.
அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டு உடைப்பு
Published on

திருட்டு

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு, ராஜீவ் நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 59). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.750 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மட்டும் திருட்டு போயிருந்தது.

அடுத்தடுத்து 2 கடைகளில்...

இதேபோல் மளிகைக்கடையின் அருகே ரெங்காநகர் மேட்டு தெருவை சேர்ந்த செந்தில்குமார்(43) என்பவர் வைத்துள்ள சலூன் கடையிலும், சிவராமலிங்கம் என்பவர் வைத்துள்ள தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யும் கடையிலும் ஷட்டர் கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 2 கடைகளிலும் பணம் ஏதும் திருட்டு போகவில்லை.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com