லாரி டிரைவர் தற்கொலை

வடமதுரை அருகே, விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர் தற்கொலை
Published on

வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 39). லாரி டிரைவர். கடந்த சில மாதங்களாக இவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் மனம் உடைந்த செல்வக்குமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த செல்வக்குமாருக்கு, சிவகாமி என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com