லாரி டிரைவர் தற்கொலை

வேடசந்தூர் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர் தற்கொலை
Published on

வேடசந்தூர் அருகே உள்ள கெண்டையகவுண்டனூரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). லாரி டிரைவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், பழனி நோக்கி லாரியை ஓட்டி சென்றார். சத்திரப்பட்டி அருகே அந்த லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த பள்ளி பஸ் மீது லாரி மோதியது. பின்னர் அங்கிருந்த ரெயில்வே கேட்டில் மோதி லாரி நின்றது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அருண்குமார், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இதனால் கடந்த மாதம் இவர், விஷம் குடித்து வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் நேற்று அருண்குமார் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த அருண்குமாருக்கு உமா (30) என்ற மனைவியும், சரவணகுமார் என்ற மகனும், தீபிகா என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com