கள்ளக்காதலியை வீட்டிற்கே அழைத்து வந்த லாரி டிரைவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி


கள்ளக்காதலியை வீட்டிற்கே அழைத்து வந்த லாரி டிரைவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி
x

கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து இனிமேல் இவர் நம்முடன் இங்குதான் வசிப்பார் என அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சின்னா கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டி (வயது 38), லாரி டிரைவர். இவர் அதேபகுதியை சேர்ந்த அம்மு (28) என்பவரை காதலித்து 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில், அருள்பாண்டிக்கும் அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் யாருக்கும் தெரியாமல் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அருள்பாண்டி தனது கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்து இனிமேல் இவர் நம்முடன் இங்குதான் வசிப்பார் என மனைவி அம்முவிடம் கூறியுள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அம்மு வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். வெகு நேரமாகியும் அவர் கீழே வராததால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்முவின் தாயார் ஆனந்தி நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story