தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்
தாய்லாந்தில் நடந்த யோகா போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை
Published on

ஏசியன் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடந்தது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்தது. இதில், இந்தியா, ஈரான், தாய்லாந்து உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு 5 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் வெங்கட்கிருஷ்ணன், ஆர்டிச் சிங்கிள் பிரிவில் உலக அளவில் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தார். இதுபோல், மதுரை சக்குடி கல்யாணி மெட்ரிக்குலேசன் பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் வெற்றி மாறன் 8 வயது முதல் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் உலக அளவில் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். ஆர்டிச் சோலோ பரிவில் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அமுதன் என்ற மாணவர், 4-ம் இடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற அந்த மாணவர்களை பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பயிற்சியாளர் ஞானவேல் என்ற ஜீவா உள்ளிட்டோர் பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com