கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பு

நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கின்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா - துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பு
Published on

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. சத்குரு முன்னிலையில் நாளை காலை 6 மணி வரை நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, ஆதியோகி திவ்ய தரிசனம் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 லட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஈஷா யோகா மையத்தில் பல்வேறு சிற்ப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவியும் இந்த விழாவில் பங்கேற்கிறார். மேலும், நடிகைகள் தமன்னா, கங்கனா ரனாவத் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்கின்றனர்

இவ்விழாவில் நேரிலும், நேரலையிலும் பங்கேற்கும் கோடிக்கணக்கான மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்து கொள்வதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் பிரபல பின்னணி பாடகர் சங்கர் மஹாதேவன், தமிழ் நாட்டுப்புற பாடகர் மஹாலிங்கம், பஞ்சாபி இசை கலைஞர் குர்தாஸ் மான், கர்நாடக இசை கலைஞர் சந்தீப் நாராயணன், பாலிவுட் இசை கலைஞர்கள் ப்ரித்வி கந்தர்வ், ரஞ்ஜித் பட்டரசர்ஜி, பாரடெக்ஸ் (தனிஷ்க் சிங்) உள்ளிட்ட தேசத்தின் தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com