சங்கராபுரம் ஏரிக்கரை அருகே ஆண் பிணம்

சங்கராபுரம் ஏரிக்கரை அருகே கிடந்த ஆண் பிணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் ஏரிக்கரை அருகே ஆண் பிணம்
Published on

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் கிராமம், திருக்கோவிலூர் மெயின் ரோடு, ஏரிக்கரை அருகே சுமார் 58 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் இறந்து கிடந்தார். அவர் வெள்ளை வேட்டி, துண்டு அணிந்திருந்தார். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தொயவில்லை? இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com