விழுப்புரம் அருகே ஆண் பிணம்

விழுப்புரம் அருகே ஆண் பிணம் கிடந்தது.
விழுப்புரம் அருகே ஆண் பிணம்
Published on

விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், விழுப்புரம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தொயவில்லை. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்த நபர் யார், அவர் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com