தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு நிதியுதவி

கோவில்பட்டியில் தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு நிதியுதவி
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே சித்திரம்பட்டி கிராமத்தில் உள்ள தீக்குச்சி தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியம்மாள் (வயது 63) உடல் கருகி பரிதாபமாக பலியானார். அவரது குடும்பத்தினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் ரூ.4 லட்சம் இழப்பீடு தருவதாக கூறி, அன்றைய தினம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர். மீதித்தொகையான ரூ.1 லட்சத்தை வழங்க கோரி கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மூதாட்டியின் மகள்கள் குடும்பத்

தினருடன், சி.ஐ.டி.யு. அமைப்பினர் காத்திருப்பு பாராட்டம் நடத்தினர். அவர்களுடன் வருவாய் ஆய்வாளர் ராஜசேகர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வருவாய் ஆய்வாளர் மூதாட்டி குடும்பத்தினரிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com