பஸ் டெப்போவில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை - போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

மழைக்காலங்களில் பேருந்து பணிமனைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பஸ் டெப்போவில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை - போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
Published on

சென்னை,

மழைக்காலங்களில் பேருந்து பணிமனைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் 3 நாள் கண்காட்சி தொடங்கி வைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும், சிஎம்டிஏ நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் பேருந்து பணிமனைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com