மீனாட்சி - சொக்கநாதர் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா

அருப்புக்கோட்டை மீனாட்சி-சொக்கநாதர் கோவில் ஆனி பிரம் மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மீனாட்சி - சொக்கநாதர் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா
Published on

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவிலாக இந்த தலம் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் வரும் ஜூன் 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஜூலை 1-ந் தேதி(சனிக்கிழமை) தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

கொடியேற்றத்தை முன்னிட்டு மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த கொடியேற்ற விழாவில் அருப்புக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com