மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த மேல்நரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட கம்பீரமான தோற்றத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இவ்வாண்டுக்கான 116-ம் ஆண்டு திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு 70 அடி கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான 12-ம் தேதி இரவு திருத்தேர் பவனியும், 13-ம் தேதி இரசு பெருவிழா திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com