கொடைக்கானலில் மினி மாரத்தான் போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கொடைக்கானலில் மினி மாரத்தான் போட்டி
Published on

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நட்சத்திர ஏரி பகுதியில் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர்.

ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி சேத்துமடை அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜன் முதலிடம் பிடித்தார். நத்தம் தனியார் அகாடமியை சேர்ந்த ராகவ் 2-ம் இடமும், விவேகானந்தன் 3-ம் இடமும் பிடித்தனர். இதேபோல் பெண்கள் பிரிவில் கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவி திரிஷா முதல் இடம் பிடித்தார். நத்தம் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி நேகா 2-ம் இடம் பிடித்து அசத்தினார். கொடைக்கானல் தனியார் பள்ளி மாணவி கிருத்திகா 3-ம் இடம் பிடித்தார்.

இதையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பிரையண்ட் பூங்காவில் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். அப்போது பெண்கள் பிரிவில் 2-ம் இடம் பிடித்த மாணவி நேகாவை அதிகாரிகள் பாராட்டினர். இந்த விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜூகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com