டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்

உயிரிழந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினார்.
டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல்
Published on

தேனி,

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார்(வயது 45) இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத் தொடர்ந்து, டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடல் தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் அவரது பெற்றோர் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் தேனி அணைக்கரப்பட்டியில் உள்ள டி.ஐ.ஜி. விஜயகுமாரின் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் சென்றார். அங்கு விஜயகுமாரின் பெற்றோரை சந்தித்து பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com