தென்பெண்ணை ஆற்றின் நீர்நிலைகளில் கிரானைட் கழிவுகள் கலந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை

கழிவுநீர் கலப்பதால் தென்பெண்ணை ஆற்றில் பெரும் மாசு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றின் நீர்நிலைகளில் கிரானைட் கழிவுகள் கலந்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் எச்சரிக்கை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கழிவுநீர் கலப்பதால் தென்பெண்ணை ஆற்றில் பெரும் மாசு ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் பாசன பகுதிகளில் கிரானைட் கழிவுகள் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com