ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

வரும் 26 -ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .

ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகளான தியாகராஜன், வெங்கடேசன், தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையினால் காலவரையற்ற போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com