தூத்துக்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்த ரவுடி சாவு

தூத்துக்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்த ரவுடி இறந்து போனார்.
தூத்துக்குடியில் மாடியில் இருந்து தவறி விழுந்த ரவுடி சாவு
Published on

தூத்துக்குடி ராஜகோபால்நகரை சேர்ந்தவர் அர்ச்சுனன் (வயது 23). இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 6 வழக்குகள் உள்ளன. சிப்காட் போலீஸ் நிலையத்தில் 2019-ம் ஆண்டு முதல் குற்றவாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தாராம். பிரபல ரவுடியான இவர் சம்பத்தன்று வீட்டின் மாடியில் மது குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து குடிபோதையில் கீழே இறங்க முயன்றபோது, தவறி கீழே விழுந்து விட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த அர்ச்சுனனை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com