மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு

அன்னவாசல் அருகே புதுமனை புகுவிழாவிற்கு உறவினரை அழைக்க சென்ற போது மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு
Published on

புதுமனை புகுவிழா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 25). இவர் கீரனூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் இவர் புதிதாக வீடு கட்டி இன்று (புதன்கிழமை) விழாநடத்த இருந்தார்.

இந்த நிலையில் இவரது உறவினர் ஒருவரை அழைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அன்னவாசல் சாலையில் கீழக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தார்.

வாலிபர் பலி

அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் புதுமனை புகுவிழாவிற்கு உறவினரை அழைப்பதற்காக சென்றபோது மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com