வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

மணமேல்குடி அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர்கள் 2 பேர் பலியாகினர்.
வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
Published on

கொத்தனார்கள்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் பழனிவேல் (வயது 30). மணமேல்குடி தண்டலை ரோடு பகுதியை சேர்ந்தவர் வைகோ மகன் சத்தியமூர்த்தி (26). இவர்கள் இருவரும் அறந்தாங்கி பகுதியில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் நேற்று இரவு அறந்தாங்கிக்கு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சத்தியமூர்த்தி ஓட்டினார்.

2 வாலிபர்கள் பலி

மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலை வழியாக இடையாத்திமங்கலம் பிரிவு சாலையில் வந்த போது, அந்த வழியாக வந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனிவேல், சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com