

திருப்பூர்,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நிறைவு யாத்திரையை திருப்பூரில் தொடங்கினார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிந்தே வாக்களிக்கும் மக்களவைத் தேர்தல் இது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் கூட்டம் எனவே மக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர வேண்டும்.
'வேல் யாத்திரை' பா.ஜ.க.,வுக்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்ததுபோல 'என் மண் என் மக்கள்' யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க போகிறது என்றார்.