விடுதலை கோரிய நளினி வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
விடுதலை கோரிய நளினி வழக்கு: சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இதன் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென கூறி நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கவர்னரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல், தமிழக அமைச்சரவை தீர்மானத்தின்படி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரனும் தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com