ஊஞ்சலூர் அருகே தவறாக எழுதப்பட்ட மைல்கல்

ஊஞ்சலூர் அருகே மைல்கல் தவறாக எழுதப்பட்டுள்ளது.
ஊஞ்சலூர் அருகே தவறாக எழுதப்பட்ட மைல்கல்
Published on

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் கருக்கம்பாளையம் அருகே மொசுக்கரை என்ற கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் வழியில் உள்ள மைல்கல்லில் மொசுக்கரை என்பதற்கு பதிலாக மெசுக்கரை என்று எழுதப்பட்டு உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலத்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டனர். ஆனாலும் திருத்தப்படவில்லை. இனியாவது அதிகாரிகள் மைல்கல்லில் உள்ள எழுத்து பிழையை சரிசெய்வார்களா? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com