பண்ணாரி அருகேரோட்டை கடந்து சென்ற யானைக்கூட்டம்

பண்ணாரி அருகே ரோட்டை யானைக்கூட்டம் கடந்து சென்றது.
பண்ணாரி அருகேரோட்டை கடந்து சென்ற யானைக்கூட்டம்
Published on

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் அவ்வப்போது வனவிலங்குகள் வனச்சாலைகளை கடப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. இதை கண்டதும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். 30 நிமிட நேரம் ரோட்டிலேயே யானைகள் அங்கும், இங்குமாக உலா வந்தன. பின்னர் அந்த யானைகள் ரோட்டை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com