புஞ்சைபுளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது

புஞ்சைபுளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது.
புஞ்சைபுளியம்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்தது
Published on

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சொந்தமான வேன் புங்கம்பள்ளிக்கு சென்றது. புஞ்சபுளியம்பட்டி டானா புதூரை சேர்ந்த ஆனந்த் என்கிற கார்த்திகேயன் (வயது 37) என்பவர் வேனை ஓட்டினார். புங்கம்பள்ளியில் 20 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி வேன் சென்றுகொண்டு இருந்தது. புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையம் தளபதி நகர் பகுதியில் ஒரு வளைவில் திரும்பும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

வேன் கவிழ்ந்தபோது உள்ளே இருந்த மாணவ, மாணவிகள் 'அய்யோ அம்மா' என்று அபயக்குரல் எழுப்பினர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் உடனே ஓடிவந்து வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்து 20 மாணவ, மாணவிகளையும் பத்திரமாக மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com