புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்

சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது
புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது டிரைவர் உயிர் தப்பினார்
Published on

 புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவனம் மளிகை பொருட்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றிகொண்டு புங்கம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. சரக்கு ஆட்டோவை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.

புஞ்சைபுளியம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சென்றபோது சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் பிரகாஷ் காயமின்றி உயிர் தப்பினார். இதனால் சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு வாகனம் மூலம் சரக்கு ஆட்டோ மீட்கப்பட்டது.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com