சாத்தான்குளம் அருகேவிபத்தில் தொழிலாளி படுகாயம்

சாத்தான்குளம் அருகே விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
சாத்தான்குளம் அருகேவிபத்தில் தொழிலாளி படுகாயம்
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள பிடானேரி சமத்துவபுரத்தை சேர்ந்த திருமணி மகன் ஆனந்த ராம் (வயது 38). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சாத்தான் குளம் சென்று கொண்டிருந்தார். அரசு போக்குவரத்து கழக விலக்கு அருகே சென்றபோது, எதிரே பொத்தகாலன்விளையை சேர்ந்த அந்தோணி ராசையா மகன் செல்வ ஜெயசிங் ஒட்டி வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆனந்தராம் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com