தேனி அருகே ஊராட்சி தலைவா மீது தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

தேவதானப்பட்டி அருக ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடத்திய மாம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி அருகே ஊராட்சி தலைவா மீது தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

தேனி அருகே உள்ள அரண்மனை புதூரை சேர்ந்தவர் .பிச்சை (வயது 51). அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். மேலும் கேபிள் டி.வி. தொழிலும் செய்து வருகிறார். நேற்று இரவு இவர், தனது கேபிள் டி.வி. அலுவலகத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். அப்போது அம்பேத்கர் சிலை அருக வேகத்தடையில் ஏறி இறங்கியபோது மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதையடுத்து படுகாயமடைந்த அவர் கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com